நொய்டாவில் வரதட்சிணை கொடுமை காரணமாக மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த 2024 டிசம்பர் மாதம், கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த ரித்திக் தன்வார் என்பவருக்கும் தீபிகாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளான நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாகநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தீபிகா தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த மத்திய நொய்டா காவல் துணை ஆணையர் தலைமையிலான பொலிஸார் தீபிகாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தீபிகாவின் காது, மூக்கில் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்தக் காயம் இருந்ததாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
