தமிழ்நாடு சட்டப்பேரவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் விரைவில் தமிழக வெற்றிக் கழகம் தடம் பதிக்கவுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற விஜய், பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார்.
தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதியை காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக சார்பில் போட்டியிடுபவரே மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்.
