மலையக மக்களின் காணி உரிமையை வென்றெடுக்க – தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கிய நடைபயணம்.
மலையக மக்களின் காணி உரிமைகளைக் கோரி 7 வயது மாணவர் தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை இன்று (20) புதன் கிழமை உலக சாதனையாளர் பிரேம் கார்கி தொடங்கி உள்ளார் .
குறிப்பாக மலையக வாழ் மக்களின் நில உரிமைகளை வென்றெடுப்பதையும், இதுகுறித்து அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ள துறைகளுக்கும் தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை வழங்குவதற்காகவே தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
இவ்வாறு தலவக்கலை நகரத்திலிருந்து தொடங்கி கொட்டக்கலை நகரத்தை அடைந்த போது மருத்துவ மற்றும் வர்த்தக சமூகத்தினர் உற்சாகமான வரவேற்பினை வழங்கினர் .
இந்த நடைப்பயணம் 7 நாட்களுக்குள் கொழும்பை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
