நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டிய – நாரம்மல வீதியின் போஹிங்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த காரின் சாரதி, அதில் பயணித்த பெண் ஒருவர் மற்றும் இரு பிள்ளைகள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், காரின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் என தெரியந்துள்ளது.
இதேவேளை, கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை – தெஹியத்தக்கண்டிய வீதியின் 12ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹியத்தக்கண்டிய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் உடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
