மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலைகளைச் சமாளிப்பதற்காக அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக 500 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலேயே, இந்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியாமல் போனதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
