நுவரெலியா – பம்பரகலை தோட்டத்தின் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தொடர்ந்து சனிக்கிழமை (23) அன்று பால்குட பவனி நடைபெற்று பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, மாலையில் வேட்டை திருவிழாவும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (24) அன்று பறவைகாவடி மற்றும் தீ மிதிப்பு நடைபெற்று மாலையில் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
இன்று (25) திங்கட்கிழமை சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜையுடன் தீப ஆராதனை இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க மேள வாத்தியங்களுடன் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்படட தேரில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களின் தேர் உற்சவம் நடைபெற்றது.
நாளை (26) செவ்வாய்க்கிழமை பச்சை சாத்துதல், மாலை மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் (27) புதன்கிழமை தீர்த்த உற்சவமும் கரகம் வீதி உலா என்பன நடைபெற்று கொடி இரக்கத்துடன் விழா நிறைவுபெறும்.
