மெனின்ஜைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட 203 பேர் இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நோய்த்தொற்று தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
