குருணாகல் நகரில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று வியாழக்கிழமை (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீப்பரவலை கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
