ஏறாவூர் பொலிஸ் பிரிவு, நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழந்து 11வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று (28) வியாழக்கிழமை மாலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்
ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில் , தந்தையாருடன் வசித்துவந்த சிறுமி, நேற்று(28) தனது சகோதரனுடன் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் தந்தை வேலை முடித்து வீடு திரும்பிய போது, குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள ஒரு பேசினில் சிறுமி கிடப்பதை கண்டு அவரை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
