கொழும்பு – வளிமண்டலவியல் துறை பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (03) காலை 11.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 09 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளதாக துறை கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை நிலைமையின் தாக்கம் காரணமாக, மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணிக்கு 40–50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
