உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (03) தனது கையொப்பத்தை இட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இச்சட்டமூலம் அதிகாரப்பூர்வமாக சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய சட்ட விதிகளின்படி, நாட்டில் மேற்கொள்ளப்படும் சில குறிப்பிட்ட முக்கிய நிதிப் பரிமாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாற்றமடைந்துள்ள புதிய சட்டத்தின்படி பின்வரும் செயற்பாடுகளுக்கு TIN சான்றிதழ் அவசியமாகிறது:
* நடப்புக் கணக்கு (Current Account) ஒன்றைத் ஆரம்பிக்கும் போது.
* அரசாங்கத்திடம் அல்லது உள்ளூராட்சி மன்றங்களிடம் கட்டிடத் திட்டங்களுக்கான அனுமதியைக் கோரும் போது.
* மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தில் வாகனம் ஒன்றை முதன்முறையாகப் பதிவு செய்யும் போது அல்லது அதன் உரிமையை மாற்றும் போது.
* காணி அல்லது சொத்துக்களைப் பதிவு செய்யும் போது அல்லது அதன் உரிமையை மாற்றும் போது.
நாட்டின் வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கோடும், நிதிப் பரிமாற்றங்களை முறைப்படுத்தும் வகையிலும் இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
