நீர்கொழும்பில் இடம்பெற்ற தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர், நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, புத்தளம் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடனும் இவர்கள் தொடர்பு பட்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சங்கநபர்களால் கொள்ளையிடப்பட்ட 12 தங்க மோதிரங்களும், கொள்ளையடிக்க சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களினால் திருடப்பட்ட ஏனைய தங்க நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.
