களனிவெளி ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் காரணமாக, கோட்டே வீதி ரயில் கடவைக்கு அருகிலான பிரதான வீதி நாளை (6) முற்பகல் 9.30 மணி முதல் (7) முற்பகல் 7.30 மணி வரை மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கோட்டே வீதி ரயில் கடவைக்கு அருகிலான பகுதி மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், இந்த வழியிலான ரயில் போக்குவரத்துக்கள் இடம்பெறமாட்டாது.
அத்துடன், குறிப்பிட்ட இந்த நேரப்பகுதியில் கோட்டே வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொரள்ளை சந்தியிலிருந்து கோட்டே வீதி வழியாக ஆயுர்வேத சந்தி நோக்கி பயணிக்கும் வாகனங்களும், ஆயுர்வேத சந்தியிலிருந்து கோட்டே வீதி வழியாக பொரள்ளை சந்தி நோக்கி பயணிக்கும் வாகனங்களும் இவ்வாறு மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.
