வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் நேற்று (5) வெள்ளிக்கிழமை வாள்வெட்டு குழுவினர் ஒருவீட்டினை சேதப்படுத்திய சிசிடீவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின் உடைத்து சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
பின்னர் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
