சகஸ்புர, ஹல்கஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் சகஸ்புர பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (3) அதிகாலை வேளையில் இந்தத் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
சகஸ்புர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மாதம்பிட்டிய பகுதியில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குக் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்கும், கொலையின் பின்னணியிலுள்ள உண்மைக் காரணங்களைக் கண்டறிவதற்கும் சகஸ்புர பொலிஸார் சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
