நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பிரதேச சபைக்கு உடபட்ட டெலிக்ளேர் முதல் பத்தனை சந்தி வரை புதிய பேருந்து சேவை இன்று (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மஞ்சுள சுரவீர ஆரச்சி அவர்களின் விசேட பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைசெல்வி, கொட்டகலை பிரதேச சபை உப தவிசாளர், தலவாக்கலை நகர சபைத் தலைவர், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
