காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த கடற்பரப்புகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்படைச் சமூகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
