கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரி அவரது மனைவி மற்றும் சட்டத்தரணி ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இரண்டு தனித்தனி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
