மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள புடவைக் கடையொன்றில் இன்று சனிக்கிழமை (20) பகல் ஏற்பட்ட தீ பரவினால் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த கடை உரிமையாளர் பகல் சாப்பாட்டுக்காக கடையை மூடி விட்டு அவரது வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முற்றாக தீயில் சேதமடைந்துள்ள அக்கடைக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
