வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவவத்த, கிங் ஓயா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 270 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 4,860 லீட்டர் கோடா ஆகியவற்றுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (20) மதியம் வென்னப்புவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கல்நேவ மற்றும் ஏகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
