கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுடைய சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று மதிய வேளையில் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி காணப்பட்ட கிணற்றில் தவறுதலாக விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் அறிவரசன் டினுசியா என்ற இரண்டு வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் மேலதிக மருத்துவ மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, குறித்த கிணற்றில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னரும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
