முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக லபுகம மற்றும் கலதுவாவ நீர்த்தேக்கங்களிலிருந்து மகரகம நோக்கி நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் வேலை நடைபெற உள்ளதால், சில பகுதிகளில் நாளை (24) மாலை முதல் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.
வாரியத்தின் தகவலின்படி, இந்த நீர் தடை நாளை (24) மாலை 6.00 மணி முதல் அடுத்த நாள் (25) மாலை 6.00 மணி வரை அமலில் இருக்கும்.
இதன் காரணமாக கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்த மற்றும் மகரகம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள நீர் வாரியம், சேவை மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
