Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2,847 தாதியர்களுக்கு நியமனம்!

#NursingAppointments #HealthcareJobs #SriLankaHealth #NewRecruitment #GovernmentJobs #Nurses #HealthSector #OctoberAppointments #PublicService #BreakingNews

ஆனி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் 2021 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த மாணவத் தாதியர்களுக்கு தொப்பி அணிவித்தல் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு இன்று (25) முற்பகல் அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்றது.

அத்துடன், 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,949 பேருக்கும், ஒகஸ்ட் மாதத்தில் 2,920 பேருக்கும் தாதியர் நியமனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

2030 ஆம் ஆண்டளவில் தாதியர் சேவைக்காக 13,600 பேரை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அந்த இலக்கில் 50% ஐ இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாதியர் சேவையில் இணையும் அனைவரதும் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வரும் தாதியர் பயிற்சிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து தற்பொழுது திட்டமிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் இலவச சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதில் தாதியர் சேவை மிகவும் முக்கியமானது எனவும், இது ஒரு கௌரவமான தொழில் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், முதலாம் ஆண்டு செய்முறைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவத் தாதியர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

21 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு

வைகாசி 15, 2026
இலங்கை

கல்முனையில் சிறுவர்களுக்கு பணம் தருவதாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்த வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஒயா – கார்லபேக் டிவிசன் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான உதவி கோரல்!

ஆனி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் அமரிக்கா இடையே கட்டாரில் எந்த சந்திப்பும் இல்லை!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube