இலங்கை கடற்பரப்பின் அரிய பொக்கிஷமான “கருப்பு பவளத்தை” (Black Coral) சட்டவிரோதமாக கடத்திய நபர் ஒருவர், நாரட்டமுவ – நிட்டம்புவ பகுதியில் வைத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!
இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 723 கிராம் எடை கொண்ட அரிய வகை கருப்பு பவளம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதன்கிழமை (24) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் குறித்த நபருக்கு நீதிமன்றம் 25,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது.
உலகளவில் கருப்பு பவளங்கள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதால், இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி இதனை தொடுவது கூட பெரிய குற்றமாகும்!
இவ்வாறான இயற்கை வளங்களை அழிக்கும் கடத்தல் கும்பல்கள் பற்றி உங்களுக்கு தகவல் தெரிந்தால், உடனடியாக 1992 என்ற வனஜீவராசிகள் அவசர இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
