கல்கிஸ்சை கடற்கரையில் நேற்று வியாழக்கிழமை (25) மாலை நீராடச் சென்ற 21 வயதுடைய நுகேகொடை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட போது அங்கிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பற்றப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இளைஞரை முதலுதவி அளித்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
