Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த தாய் சடலமாக மீட்பு, 10 வயது மகள் நீரில் மாயம்

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கலேவெல – தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 10 வயது மகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த தாய் மற்றும் காணாமல்போன மகள் ஆகிய இருவரும் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு குறித்த தாயின் மகன், மீன்பிடிப்பதற்காக துபார வாவிக்குச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த தாய் தனது 10 வயது மகளையும் அழைத்துக்கொண்டு மகனைத் தேடி நள்ளிரவில் வெளியே சென்றுள்ளார்.

இதன்போது, இருள் சூழ்ந்த பகுதியில் தேடலில் ஈடுபட்ட அவர்கள், எதிர்பாராத விதமாக துபார வாவிக்கு அருகில் தோண்டப்பட்டிருந்த ஆழமான விவசாயக் கிணறு ஒன்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, 45 வயதுடைய தாயின் சடலம் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கிணற்றுக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள 10 வயது சிறுமியை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கலேவெல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

டோக்கியோ ஆரம்பப் பாடசாலை ஒன்றில் தீ விபத்து!

ஆனி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் வைபவரீதியாக ஆரம்பம்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இதுவே தனது கடைசி நாடாளுமன்ற உரை – இராமநாதன் அர்ச்சுனா

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube