கட்டாரில் நடைபெறவுள்ள உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த ஆலோசகர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்கள் இவர்களே என்பதால், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அதேவேளையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த நுணுக்கமான விடயங்களை ஆராயும் ‘தொழில்நுட்ப ரீதியான சந்திப்பு’ ஒன்றும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் முக்கிய கவனம், அண்மைய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தி, வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக அமைந்த ‘ஹோர்முஸ் நீரிணை’ மற்றும் அதன் கட்டுப்பாடு தொடர்பான விவகாரங்கள் மீதே இருக்கப்போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
