வடக்கு மாகாணத்தில் செயற்படும், மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நாட்டிலேயே சிறந்தவர்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கான புனர்வாழ்வு மையம் இல்லாமை மற்றும் உளநலத் தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பு வசதிகள் குறைபாடு போன்ற விடயங்கள் இந்தக் கலந்துரையாடலின்போது விவாதிக்கப்பட்டன.
இந்தநிலையில், தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன்,வடக்கு மாகாண அதிகாரிகளுக்கான வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
