நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘சிட்டி பிராண்டிங்’ (City Branding) வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்திற்காக அனுராதபுரம், கதிர்காமம், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய நான்கு நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நகரங்களை தனித்துவமான அடையாளங்களுடன் மேம்படுத்துவதன் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் நடைமுறைக்கு அமைவாக, ஆலோசனை சேவைகளை வழங்கும் நான்கு நிறுவனங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவை சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களும் தொடர்புடைய நிர்வாக அமைப்புகளும் கலந்து கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், ஒவ்வொரு நகரத்திற்குமான பிராண்டிங் திட்டங்கள் தொடர்பான முதல் அறிக்கையை நேற்று (1) சமர்ப்பித்துள்ளன.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் எரங்க குணசேன உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
