கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த , நாட்டின் அடிப்படை உணவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் அரிசியை, அதற்கு அப்பாற்பட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக விரிவுபடுத்தும் நீண்டகால திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
“நெல் மூலம் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை வெறும் முக்கிய உணவாக மட்டுமல்லாது, பிற உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,” என அவர் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தை போட்டியின் மூலம் விவசாயிகளை பாதுகாப்பது இந்த திட்டத்தின் முக்கிய அடிப்படையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“சந்தை போட்டி வழியாக விவசாயியை பாதுகாப்பதே அரசின் நீண்டகால திட்டமாகும். இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த தற்போது தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.
