ரயில் இயந்திரங்களின் பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை–அவிசாவளை இடையிலான களனிவெளி ரயில் சேவைகள் இன்று (04) மாலை முதல் வழமையான நேர அட்டவணையின்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சேவைகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
