ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை தற்போது கொள்கை சீர்திருத்த மட்டத்திலிருந்து மாறி, முழு அளவிலான அமுலாக்க நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச ஊழல் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
