நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) திங்கட்கிழமை காலை மீண்டும் ஏற்பட்ட மோதலில் 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள சில கைதிகளை கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைக்குள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டும், மோதல்களைக் கட்டுப்படுத்தி கைதிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
