Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

துருக்கிக்கு ஜெட் இன்ஜின்கள் விற்பனைக்கு இஸ்ரேல் எதிர்ப்பு!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா துருக்கிக்கு அதிநவீன F-35 போர் விமானங்களையோ அல்லது அவற்றுக்கான ஜெட் இன்ஜின்களையோ வழங்கக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், துருக்கிக்கு மேம்பட்ட ஆயுதங்கள் வழங்கப்படுவது மத்திய கிழக்கின் அதிகார சமநிலையை பாதிக்கும் என்றும், இஸ்ரேலின் வான்வழி மேலாதிக்கமே அப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு முக்கியமானது என்றும் கூறினார். மேலும், துருக்கி ஆட்சி முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்பின் தாக்கத்தில் இருப்பதாகவும் விமர்சித்தார்.

2019ஆம் ஆண்டு துருக்கி ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா F-35 திட்டத்திலிருந்து துருக்கியை நீக்கியது. அந்த பாதுகாப்பு அமைப்பு F-35 விமானங்களின் முக்கிய தொழில்நுட்பத் தகவல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு டிரம்ப் நிர்வாகம் துருக்கியுடன் உறவை மீண்டும் மேம்படுத்தும் முயற்சியில், துருக்கியின் உள்நாட்டு ‘KAAN’ போர் விமானத் திட்டத்திற்காக சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான GE F110 ஜெட் இன்ஜின்களை வழங்கும் வாய்ப்பை பரிசீலித்து வருகிறது.

மத்திய கிழக்கில் தனது இராணுவத் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் Qualitative Military Edge (QME) கொள்கையின்படி, இஸ்ரேலின் தொழில்நுட்ப முன்னிலையை பாதிக்காத வகையில் மட்டுமே அப்பிராந்திய நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தொடர்ந்து இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருவதும், சிரியா உள்ளிட்ட பகுதிகளில் துருக்கியின் செல்வாக்கு அதிகரித்து வருவதும், F-35 போன்ற அதிநவீன ஆயுதங்கள் துருக்கிக்கு கிடைப்பது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற கவலையை அதிகரித்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது ‘மெயின் ஷிப் 6’ அதிநவீன சொகுசுக் கப்பல் !

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு பறிமுதல்; 9 மீனவர்கள் கைது

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த இந்திய பிரஜையின் சடலம் நல்லடக்கம்

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube