நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது 73 வயதுடைய இந்திய கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த காலதாமதம் ஏற்பட்டதால், மரணம் தொடர்பான தகவல் வெளியிட தாமதமானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இறப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் 2025ஆம் ஆண்டு விமானம் மூலம் இலங்கைக்கு 1.908 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை கொண்டு வந்தமை மற்றும் அதனை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும், சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பான விசாரணைகளும் தொடர்கின்றன.
