இலங்கையின் இணையவழி நிதி மற்றும் தரவு மோசடிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மாத்திரம் இவ்வாறான மோசடிகள் தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழுவின் தலைமைத் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இணையவழி மூலம் பணப்பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய செயல்பாடுகளில் ஈடுபடும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
உத்தியோகபூர்வமற்ற அல்லது அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய செய்திகள், லிங்குகளைக் கிளிக் செய்வதையோ அல்லது தனிப்பட்ட விபரங்களை வழங்குவதையோ முற்றாகத் தவிர்க்கவும்.
அவசர நிதித் தேவைகள் ஏற்படும் பட்சத்தில், மத்திய வங்கியின் முறையான அனுமதி பெற்ற வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நிதி நிறுவனங்களை மட்டுமே அணுக வேண்டும்.
இணையவழியில் இவ்வாறான ஏதேனும் ஏமாற்றுச் சம்பவங்களை எதிர்கொண்டால், உடனடியாக அதுகுறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகாரளிக்குமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக்குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
