நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்துக்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்படலாம் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆரம்ப கட்டமாக ரூ.5 இலட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இறுதி இழப்பீட்டுத் தொகை குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிச்சடங்கு செலவுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்றுள்ளதுடன், காயமடைந்த அதிகாரிகளுக்கான நிவாரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 7 அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
