ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் சிலர் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால் பயிற்சியின் நோக்கம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கும் பயிற்சி ஆசிரியர்கள், ஊக்கமளிக்கும் மற்றும் திறமைகளை மேம்படுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
