தெருநாய்களுக்கு உணவு வழங்குபவர்கள் அவற்றின் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சஞ்சிகா பெரேரா தெரிவித்துள்ளார்.
நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்த, 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கும் தேசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 360 ஆக இருந்த உயிரிழப்புகள் தற்போது 14 ஆக குறைந்துள்ள போதிலும், நாய்கள் மூலம் நோயை கட்டுப்படுத்துவதே நிரந்தர தீர்வு என அவர் வலியுறுத்தியுள்ளார்.
