அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுகளுக்கு இலங்கை நீதிச் சேவை சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வு வயதை மாற்றுவதற்கு தாம் இணங்கவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது.
