உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் அபாயம் 2022ஆம் ஆண்டு ஏற்பட்டபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் பேசியதன் மூலம் அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டதாக போலந்தின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விளாடிஸ்லாவ் தியோபில் பார்டோசெவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ரஷ்யா மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய உலகத் தலைவர்களில் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் முக்கியமானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
