நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 520 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 179 கிராம் ஹெரோயின் 228 கிராம் ஐஸ் (ICE) போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளனஃ
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
