உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை (21) நடைபெறவுள்ளன.
இதனை முன்னிட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நாளை அதிகாலை முதல் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு தேவாலயத்தைச் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
