கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
புறக்கோட்டை மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (24) மதியம் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த 204,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 04 கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 04 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் 36, 37, 41 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் மட்டக்குளி, ராஜவெல்ல மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
