கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் குறித்த பரிசோதரன நடைபெற்றது.
குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா? என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
பாவனைக்கு தகுதியற்ற தரமற்ற வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பரந்தன் மற்றும் முருகண்டி வீதி போக்குவரத்தில் ஈடுபடும் குருந்துர சேவை பேருந்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .
குறித்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகள்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
