பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இராஜகிரிய பகுதியில், சீனா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியமை மற்றும் இணையக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 கோடி ருபாய்க்கும் அதிக பெறுமதியான கணினிகள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
