இந்த வருடத்தில் காணக்கூடிய பிரதான விண்கல் மழையை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை காண வாய்ப்புள்ளதாக விண்வெளி ஆய்வு மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஈடா எக்வா ரிட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் மழையை இலங்கை மக்கள் பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு வானை அவதானிப்பதன் ஊடாக விண்கல் மழையை வெறுங்கண்களால் பார்வையிட முடியும்.
