தெணியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் காய்ச்சல் நிலை காரணமாக நாளை (மே 8) அந்த 4 பாடசாலைகளும் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
