காலி, உனவடுன பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றில் அவுஸ்திரேலியபெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
38 வயதுடைய குறித்த மசாஜ் நிலைய ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
