காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – உடுகம வீதியின் மகுழுவ சந்திக்கு அருகில், பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியிலிருந்து உடுகம நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் முன்கதவிலிருந்து பயணி ஒருவர் எதிர்பாராத விதமாக வீதியில் தவறி விழுந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் காலி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
